Do or Die!
தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் உள்ள இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' என அழைக்கப்படும் இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் கருத்து.
கன்னியாகுமரி மாவடத்தின் (நாஞ்சில் நாடு) வளர்ச்சிக்கும், செல்வாக்கும் பெரிதும் பாடுபட்ட தலைவர்களையும் அவர்களின் வாழ்கை வரலாறுகளையும் பார்க்கலாம்
இவர் கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895 ஜூன் 12ஆம் தேதி கேசவன் அப்பாவு நாடாரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார், கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்....

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை....


தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில்.....


For More Travel Info.. Condact Us Now

Find and Follow Us
Quick Links
If you want to understand today,
You have to search yesterday.
You must be the change,
You wish to see in the world.
