All power is within you; You can do anything and everything
பல மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள் இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம்,மந்திர், மந்திரா, தேவஸ்தானம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பாரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன.
இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
தைவிகம் : தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச் செய்தது.
ஆசுரம் : அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது.
ஆர்ஷம் : ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது.
மாநுஷம் : மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது.
To visit Temple
நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமாரகோயில். புராணச் சிறப்பு மிக்க இந்தத் தலத்தில் முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளி மலையாக மருவியது. கேரளத்தில் திருமணத்தை 'வேளி' என்பர். முருகப் பெருமான் இங்கு வள்ளியைக் காதலித்து, கடிமணம் புரிந்ததால், 'வேளி மலை' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த மலையின் அடிவாரத்தில் கோயிலுக்கு நேர் கீழாக அழகான திருக்குளம். அதன் கரையில் ஒரு விநாயகர் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, 38 படிகள் ஏறிச் சென்றால், குன்றின் உச்சியில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது திருக்கோயில்.
- Vivekanandar

For More Travel Info.. Condact Us Now

Find and Follow Us
Quick Links
Strength is Life ...
Weakness is Death !
Man is made by his belief...
As he believes, so he is !
