top of page

See it!  Feel it!  Love it!

கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின்  சுவர்க்கம்.

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு.  வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம் 

 

இங்கு ஒன்பதாம்  நூற்றாண்டுக்கும்  முந்தைய  பல  வரலாற்றுச் சின்னங்களும், அழகனா  கடற்கரையும், மிதமான  காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான  சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம்.  வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!

Places to visit

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். . இது கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது . தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரானைட் கற்களால் ஆனகோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

 

இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும் 1550 களில் இருந்ததாகத் தெரிகிறது. பின் கி.பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த அரண்மனையை விரிவு படுத்தினார். அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்கள் பரம்பரையினரை பத்மனாப புரத்தில் கோவில் கொண்ண்டுள்ள விஷ்னுவின் சேவர்கள் என பிரகடனம் செய்தார்.1795 வரை பத்மநாபபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனை கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival

Love the land..  Live the life...

You can to feel it !!

Festival
Festival
Festival
Festival
Festival

The beach is just the

beginning…

bottom of page